பக்வாரா: பஞ்சாப் மாநிலம் பக்வாராவில் உள்ள தனியார் பல்கலைகழகத்தில் ஆப்ரிக்க நாடான சூடானை சேர்ந்த மாணவர்கள் பலர் பயின்று வருகின்றனர். நேற்று காலையில் பல்கலைகழகத்திற்கு வெளியே உள்ள குடியிருப்பு பகுதியில் தங்கியிருந்த சூடான் மாணவர் முகமது வாடா பலா யூசுப் அகமது மற்றும் அவரது நண்பரான அகமது முகமது நூர் ஆகியோர் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் சூடான் மாணவர்களிடம் தகராறு செய்துள்ளது. அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த கும்பல் 2 பேரையும் கத்தியால் குத்தியது. இதில் பலத்த காயமடைந்த முகமது வாடா யூசுப் அகமது பரிதாபமாக இறந்தார். அவரது நண்பர் முகமது நூர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக அப்துல் அகமது, குன்வார் அமர் பிரதாப் சிங், ஆதித்யா கர்க்,முகமது சோயிப் உட்பட 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
The post பஞ்சாபில் சூடான் மாணவர் குத்தி கொலை appeared first on Dinakaran.