விசாரணைக்குப் பின் இருவரையும் போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே போலீசார் நடத்திய விசாரணையில் கஞ்சாவை கடத்தி வந்த நபர் விமானநிலையத்தை விட்டு டாக்சியில் புறப்பட்டு சென்றது தெரியவந்தது. போலீஸ் காரை துரத்தியதை அறிந்த அந்த நபர் சிக ரெட் பிடிக்க வேண்டும் என்று கூறி டாக்சியை நிறுத்தி தப்பிவிட்டார். சிறிது நேரத்தில் அந்த இடத்திற்கு வந்த போலீசார் காரில் நடத்திய சோதனையில் 18 கிலோ உயர் ரக கலப்பின கஞ்சா கைப்பற்றப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 9 கோடி ஆகும். கஞ்சா கடத்திய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
The post கோழிக்கோடு விமான நிலையத்தில் ரூ.9 கோடி உயர் ரக கலப்பின கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது appeared first on Dinakaran.