ஆபரேஷன் சிந்தூர் வெற்றி.. விமானப் படை வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!!

பஞ்சாப் மாநிலம் ஆதம்பூர் விமானப் படை தளத்தில் வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். போர் பதற்றம் ஓய்ந்ததை தொடர்ந்து இன்று ஜலந்தரில் உள்ள ஆதம்பூர் விமானப்படை தளத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றார். அங்கு விமானப்படை வீரர்களை சந்தித்த அவர், துணிச்சல் மிகு வீரர்களிடம் கலந்துரையாடினார். தீவரவாதிகளை ஒழிப்பதற்கான ஆபரேஷன் சிந்தூரில் பங்கேற்ற வீரர்களுக்கு மோடி பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து விமானப்படை வீரர்களுடன் பிரதமர் மோடி புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

The post ஆபரேஷன் சிந்தூர் வெற்றி.. விமானப் படை வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!! appeared first on Dinakaran.

Related Stories: