தென் அந்தமான் கடல் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியது: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

டெல்லி: தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வழக்கமாக மே 4வது வாரத்தில் தொடங்கும் பருவமழை இந்தாண்டு முன்கூட்டியே தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்தியாவின் முக்கியமான நிலப்பரப்பில், முன்கூட்டியே பருவமழை தொடங்குவது இதுவாகத்தான் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

கேரளாவில் தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட (ஜுன் 1) நான்கு நாட்களுக்கு முன்னதாக மே 27ம் தேதியில் தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த வருடம் தென்மேற்கு பருவமழை இந்த மாதம் மே 27-ஆம் தேதி கேரளத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் கேரளத்தில் ஜூன் 1-இல் தொடங்கும். நிகழாண்டில், வழக்கத்தைவிட 4 நாள்களுக்கு முன்னதாக மே 27-ஆம் தேதியே தொடங்குவதற்கு சாதகமான சூழல்கள் உள்ளது.

இந்தியாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும். இந்த தென் மேற்கு பருவமழை காலத்தில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கும் மழை பொழிவு கிடைக்கும். வானிலை ஆய்வு மையத்தின் எதிர்பார்ப்புப்படி, வரும் மே 27-ம் தேதி பருவமழை தொடங்கினால், கடந்த 2009-ம் ஆண்டு மே 23-ம் தேதி பருமழை தொடங்கியதற்கு பின்பு, இந்தியாவின் முக்கியமான நிலப்பரப்பில், முன்கூட்டியே பருவமழை தொடங்குவது இதுவாகத்தான் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

The post தென் அந்தமான் கடல் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியது: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: