வந்தவாசி, மே 8: வந்தவாசி அடுத்த பெரிய குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ்(45) கட்டிட மேஸ்திரி. இவர் நேற்று முன்தினம் இரவு ஊத்துக்குளம் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் மது பாட்டில் வாங்கி உள்ளார். அப்போது ரூ.500 கொடுத்து மீதி சில்லறை கேட்டதாக தெரிகிறது. அப்போது விற்பனையாளர் தண்டராம்பட்டு பகுதியைச் சேர்ந்த தணிகாசலம்(43) ரூ.100 தான் கொடுத்தாய் மீதி நீ தான் கொடுக்க வேண்டும் என கேட்டுள்ளார்.
இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆத்திரம் அடைந்த விற்பனையாளர் தணிகாசலம் அருகில் இருந்த காலி பீர் பாட்டிலைக் கொண்டு செல்வராஜ் தலைமீது தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த செல்வராஜ் வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார். சம்பவம் குறித்து செல்வராஜ் நேற்று தெள்ளார் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள டாஸ்மாக் விற்பனையாளரை வலை வீசி தேடி வருகின்றனர்.
The post வந்தவாசி அருகே சில்லறை தகராறு கட்டிட மேஸ்திரிக்கு பீர் பாட்டிலால் தாக்குதல்: டாஸ்மாக் விற்பனையாளருக்கு போலீஸ் வலை appeared first on Dinakaran.