தமிழ்நாடு மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதலை கண்டித்து 3-வது நாளாக மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம்

நாகை: நாகை மாவட்ட மீனவர்கள் 24 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் நடத்திய கொலைவெறி தாக்குதலை கண்டித்து வேதாரண்யம், கீழ்வேலூர் தாலுக்கா மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாகை மாவட்டம் அக்கரைபேட்டை, வெள்ளப்பள்ளம், ஆர்காட்டுத்துறை ஆகிய மீனவ கிரமத்தை சேர்ந்த 24 மீனவர்கள் 5 படகுகளில் கடந்த 2-ம் தேதி கடலில் மீன் பிடிக்க சென்றபோது இலங்கை கடற்கொள்ளையர்களால் கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டது. இதனை அடுத்து இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதலை கண்டித்தும், ஒன்றிய, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வலிறுத்தியும் கீழ்வேலூர், வேதாரண்யம் தாலுக்காவை சேர்ந்த மீனவர்கள் 3வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மீனவர்கள் வேலை நிறுத்தம் காரணமாக சுமார் 500-க்கும் மேற்பட்ட பைபர் படகு மற்றும் நாட்டு படகுகள் கரையோரம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. படகுகளையும், மீன்பிடி உபகரணங்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் சேதப்படுத்துவதிவருவதை கண்டித்தும், ஒன்றிய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

The post தமிழ்நாடு மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதலை கண்டித்து 3-வது நாளாக மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: