ஆளும் மக்கள் செயல்கட்சி 87 இடங்களில் போட்டியிட்டது. மொத்தம் 27.6 லட்சம் மக்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில் மாலை 5 மணி வரை 82 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. இரவு 8 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. அதைத் தொடர்ந்து வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. முதற்கட்டமாக ஒவ்வொரு வாக்குச்சாவடியிலிருந்து தோரயமாக 100 வாக்குகள் எண்ணும் மாதிரி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது.
இதில் ஆளும் மக்கள் செயல் கட்சி 82 இடங்களை பெற்று அமோக வெற்றியை உறுதி செய்தது. எனவே முழுமையான வாக்கு எண்ணிக்கையிலும் ஆளுங்கட்சி வெற்றி பெறவே அதிக வாய்ப்புள்ளது. இதன் மூலம் ஓராண்டுக்கு முன் பிரதமராக பதவியேற்ற லாரன்ஸ் வோங்க் மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளார். மக்கள் செயல் கட்சியின் தொடர்ச்சியான 14வது வெற்றி இது.
The post சிங்கப்பூர் தேர்தல் ஆளுங்கட்சி வெற்றி: 14வது முறையாக ஆட்சியை பிடித்தது appeared first on Dinakaran.