2024ம் ஆண்டு நீட் தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட்ட 26 மாணவர்கள் சஸ்பெண்ட் ..42 பேர் மறுதேர்வு எழுத 3 ஆண்டுகள் தடை!!

டெல்லி : 2024ம் ஆண்டு நீட் தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட்ட 42 பேர் மறுதேர்வு எழுத 3 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. நீட் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன்படி 2025-26ம் கல்வியாண்டு சேர்க்கைக்கான நீட் தேர்வு நாளை மதியம் 2 முதல் 5.20 மணி வரை நேரடி முறையில் நடைபெறவுள்ளது.

இதனிடையே 2024ம் ஆண்டு நீட் தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட்ட 42 பேர் மறுதேர்வு எழுத தேசிய தேர்வு முகமை 3 ஆண்டுகள் தடை விதித்துள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு, ஆள்மாறாட்டம், வினாத்தாள் கசிவு உள்ளிட்டவை நடந்தது, சிபிஐ, தேசிய தேர்வு முகமை இணைந்து நடத்திய விசாரணையில் அம்பலம் ஆகியது. இதையடுத்து, விதிமீறல்களுக்கு உடந்தையாக இருந்த 26 எம்பிபிஎஸ் மாணவர்களை உடனடியாக இடைநீக்கம் செய்யுமாறு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிறுவனங்களுக்கு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) உத்தரவிட்டுள்ளது. மேலும் 2024–25 கல்வியாண்டிற்கான 14 மாணவர்களின் சேர்க்கை ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.மேலும் 215 தேர்வர்கள் மீது விசாரணை நடைபெற்று வருவதாக சிபிஐ அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.

The post 2024ம் ஆண்டு நீட் தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட்ட 26 மாணவர்கள் சஸ்பெண்ட் ..42 பேர் மறுதேர்வு எழுத 3 ஆண்டுகள் தடை!! appeared first on Dinakaran.

Related Stories: