இதனிடையே 2024ம் ஆண்டு நீட் தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட்ட 42 பேர் மறுதேர்வு எழுத தேசிய தேர்வு முகமை 3 ஆண்டுகள் தடை விதித்துள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு, ஆள்மாறாட்டம், வினாத்தாள் கசிவு உள்ளிட்டவை நடந்தது, சிபிஐ, தேசிய தேர்வு முகமை இணைந்து நடத்திய விசாரணையில் அம்பலம் ஆகியது. இதையடுத்து, விதிமீறல்களுக்கு உடந்தையாக இருந்த 26 எம்பிபிஎஸ் மாணவர்களை உடனடியாக இடைநீக்கம் செய்யுமாறு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிறுவனங்களுக்கு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) உத்தரவிட்டுள்ளது. மேலும் 2024–25 கல்வியாண்டிற்கான 14 மாணவர்களின் சேர்க்கை ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.மேலும் 215 தேர்வர்கள் மீது விசாரணை நடைபெற்று வருவதாக சிபிஐ அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.
The post 2024ம் ஆண்டு நீட் தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட்ட 26 மாணவர்கள் சஸ்பெண்ட் ..42 பேர் மறுதேர்வு எழுத 3 ஆண்டுகள் தடை!! appeared first on Dinakaran.