பஹல்காம் தீவிரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஏற்பட்ட பதற்றத்தால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசுடன் அமெரிக்கா தொடர்பில் உள்ளது. நிலைமையை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகிறது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப் ஆகியோருடன் பேசினார். கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்திய பிரதமர் மோடியிடம் தெரிவித்தபடி, ‘தீவிரவாதத்துக்கு எதிராக இந்தியாவுடன் அமெரிக்கா உறுதியாக நிற்கிறது.
பிரதமர் மோடிக்கு எங்களின் முழு ஆதரவு உள்ளது. இரு நாடுகளும் தங்களது பொறுப்புகளை உணர்ந்து பிரச்னைகளுக்கு தீர்வுகாண வேண்டும். அதனால் தெற்காசியாவில் அமைதியை பேண முடியும்’ என்றார். இந்நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டம்மி ப்ரூஸ், பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில், பிரதமர் மோடி மற்றும் இந்தியாவுக்கு டிரம்ப் நிர்வாகம் அளித்து வரும் ஆதரவை உறுதிப்படுத்தினார். இந்த ஆதரவு, தீவிரவாதத்துக்கு எதிரான உலகளாவிய ஒத்துழைப்பை வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது.
The post தீவிரவாதத்திற்கு எதிரான நிலைப்பாட்டில் பிரதமர் மோடிக்கு டிரம்ப் அரசு முழு ஆதரவு: அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி பேட்டி appeared first on Dinakaran.