இதன் கீழ் நீதிமன்றங்களில் சான்றுகளாக ஏற்றுக்கொள்ளக்கூடிய வழக்குடன் தொடர்புடைய நபர்களின் வாக்குமூலங்களை ஈடி பதிவு செய்கிறது. ஈடி ஒருவரை விசாரிக்கும் போது ஆதாரங்களை சேகரிக்க முடியும். ஆனால் ஒருவர் கைது செய்யப்பட்டால், பிரிவு-50 அறிக்கை பாதிக்கப்படக்கூடியதாக மாறும். கைதுக்கு பின் அவை எல்லாம் ஆதாரமாக இருக்காது. எனவே கைது செய்வதற்கு முன்பு நீங்கள் பிரிவு-50 அறிக்கையைப் பெற வேண்டும். எனவே, எனது பரிந்துரை என்னவென்றால், கைது செய்வதில் அவசரப்பட வேண்டாம். போதுமான நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள், ஆதாரங்களைப் பெற்று பின்னர் கைது செய்யுங்கள். விசாரணை முடிவடையாதபோது, ஈடி ஒருவரை முன்கூட்டியே கைது செய்தால், நிர்ணயிக்கப்பட்ட 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய முடியவில்லை என்றால், குற்றம் சாட்டப்பட்டவர், மோசமான குற்றவாளியாக இருந்தால் கூட ஜாமீன் பெறுவார். இவ்வாறு கூறினார்.
The post பணமோசடி வழக்குகளில் அவசர கைது வேண்டாம்: அமலாக்கத்துறைக்கு ஒன்றிய அரசு வக்கீல் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.