தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின்போது அதிக கட்டணம் வசூலிக்கக்கூடாது. அதற்காக கட்டண நிர்ணய ஆணையமே வைத்துள்ளோம். முன்னாள் நீதியரசர் தலைமையிலான கமிட்டியின் கட்டண நிர்ணயத்தை மீறி அதிகளவில் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தேசிய கல்வி கொள்கை என்பது மொழி சார்ந்தது இல்லாமல் பல்வேறு சரத்துக்கள் உள்ளது. பள்ளிகளில் இடைநிறுத்தம் இல்லாத மாநிலமாக தமிழகம் உள்ளது. இடைநிறுத்தல் அதிகப்படுத்தும் வேலையை தான் ஒன்றிய அரசு சொல்கிறது. புதிய கல்வி கொள்கையால் குழந்தைகள் இடைநிறுத்தம் அதிகமாக இருக்கும். நாம் இருமொழி கொள்கையில் நம்மை நிரூபணம் செய்துள்ளோம். மும்மொழி கொள்கை என்பது பெயிலியர் சிஸ்டம். அதை ஏற்க முடியாது. 6,000 ஆசிரியர் பணியிடங்கள் தொடர்பாக கோர்ட் தீர்ப்புக்காக காத்திருக்கிறோம். தீர்ப்பு வந்தவுடன் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
The post வெயில் தாக்கத்தை பொறுத்து பள்ளி திறப்பு தள்ளிப்போகும் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் எச்சரிக்கை appeared first on Dinakaran.