இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது மட்டுமின்றி விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. இதேபோல் குதிரை சவாரிக்காக கொண்டு வரப்படும் குதிரைகளையும் பயன்படுத்திய பின்னர் அனாதையாக நகரில் விட்டு விடுகின்றனர். இவை அவ்வப்போது சாலைகளில் தறிகெட்டு ஓடி சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்துகிறது. நகரில் சுற்றி திரியும் கால்நடைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். நகரில் சுற்றி திரியும் குதிரைகளின் உரிமையாளர்கள் யாரேன்றே தெரியாத நிலையில் அவைகளை பிடித்து அபராதம் விதிக்கவும், அப்புறப்படுத்தவும் முடியாத சூழல் இருந்து வருகிறது.
போக்குவரத்து நெரிசல்களும் அவ்வப்போது ஏற்படுகின்றன. எனவே கோடை சீசன் களைகட்டும் முன் ஊட்டி நகரில் சுற்றித் திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
The post ஊட்டி நகரில் திரியும் கால்நடைகள் கூட்டம்: வாகன ஓட்டிகள் கடும் அவதி appeared first on Dinakaran.