24ம் தேதி பவுனுக்கு ரூ.80 குறைந்து ஒரு பவுன் ரூ.72,040க்கு விற்கப்பட்டது. அதன் பிறகு 27ம் தேதி வரை தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி விற்பனையானது. இந்த நிலையில் நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.65 குறைந்து ஒரு கிராம் ரூ.8,940க்கும், பவுனுக்கு ரூ.520 குறைந்து, ஒரு பவுன் ரூ.71 ஆயிரத்து 520க்கும் விற்பனையானது. இந்த விலை குறைவு என்பது ஒரு நாள் கூட நீடிக்கவில்லை. நேற்று மீண்டும் தங்கம் விலையில் மாற்றம் காணப்பட்டது.
தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,980க்கும், பவுனுக்கு ரூ.320 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.71,840க்கும் விற்பனையானது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.111க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்துக்கும் விற்பனையானது. இன்று அட்சதிரிதியை கொண்டாடப்பட உள்ளது. இந்த நேரத்தில் தங்கம் விலை உயர்ந்தது நகை வாங்குவோருக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
The post தங்கம் விலை மீண்டும் அதிகரிப்பு ஒரே நாளில் பவுனுக்கு ரூ.320 உயர்ந்தது appeared first on Dinakaran.