அமலாக்கத்துறைக்கு நடிகர் மகேஷ் பாபு கடிதம்

ஐதராபாத்: தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகராக உள்ளார் மகேஷ்பாபு. இப்போது ராஜமவுலி இயக்கத்தில் தனது 29வது படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். சினிமாவில் மட்டுமின்றி, விளம்பரப் படங்களிலும் மகேஷ் பாபு நடிக்கிறார். ரியல் எஸ்டேட் விளம்பர படம் ஒன்றில் நடித்த மகேஷ்பாபு அதற்காக பெற்ற சம்பளம் குறித்த விசாரணை தற்போது அமலாக்கத்துறையில் நடந்து வருகிறது. அங்கீகரிக்கப்படாத மனைகளை விற்று மக்களை ஏமாற்றியதாக, அந்த நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது.

அப்போது மகேஷ்பாபு விளம்பரப் படத்தில் நடித்தற்காக பெற்ற சம்பளமும் விசாரணை வளையத்தில் சிக்கியது. அந்த நிறுவனத்திடமிருந்து அவர் எந்த விதத்தில் சம்பளம் பெற்றார் என்பதைத் தெரிவிக்க, அவருக்கு நேரில் ஆஜராக அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியது. அதன்படி அவர் நேற்று ஆஜராக வேண்டும். ஆனால், தனக்கு கூடுதல் அவகாசம் தரும்படி மகேஷ்பாபு பதில் கடிதம் எழுதியுள்ளாராம். வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருப்பதுதான் அதற்குக் காரணம் என கூறியுள்ளார்.

 

The post அமலாக்கத்துறைக்கு நடிகர் மகேஷ் பாபு கடிதம் appeared first on Dinakaran.

Related Stories: