சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தேர்தல் ஆணையத்தின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது. இந்த தடைக்கு எதிராக அதிமுக முன்னாள் எம்பிக்கள் கே.சி.பழனிசாமி, ரவீந்திரநாத், ராம்குமார் ஆதித்தன் உள்ளிட்டோர் மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இதனால் அதிமுக விவகாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த மனுக்களை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், அருள் முருகன் அமர்வு விசாரித்தது. இந்த விசாரணையின் முடிவில், அதிமுகவின் இரட்டை இலை சின்னம் உள்ளிட்ட விவகாரங்களை இந்திய தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என அதிரடியாக தீர்ப்பளித்தது.
இதனிடையே அண்மையில், இந்திய தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், இரட்டை இலை சின்னம் தொடர்பான விவகாரத்தை விரைவாக விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் தேர்தல் ஆணையமானது வரும் 28ம் தேதி, இரட்டை இலை சின்னம் உள்ளிட்ட அதிமுக விவகாரங்களை விசாரிக்க இருக்கிறது. அப்போது நேரில் ஆஜராக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுபப்பட்டு இருந்தது. இந்நிலையில், இன்று இரட்டை இல்லை விவகாரம் தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையத்தில் விசாரணை தொடங்கியது. எடப்பாடி சார்பில் சி.வி.சண்முகம், ஓபிஎஸ் சார்பில் வழக்கறிஞர் ராஜலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
The post இரட்டை இலை விவகாரம்: தலைமைத் தேர்தல் ஆணையத்தின் இறுதி விசாரணை தொடங்கம்! appeared first on Dinakaran.