இந்த நிலையில் மேற்கண்ட வழக்கில் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சிங் வழங்கிய தீர்ப்பில், ‘‘பொன்னியின் செல்வன் படத்தின் ‘வீரா ராஜா வீரா’ பாடல் என்பது மனுதாரர் கூறியது போல் ‘சிவா ஸ்துதி’ பாடலை போன்றே உள்ளது. அதனை நீதிமன்றம் தெளிவாக ஆய்வு செய்தது. குறிப்பாக ‘சிவா ஸ்துதி’ பாடலால் ஈர்க்கப்பட்டு அதன் உந்துதலால், ‘வீர ராஜ வீரா’ பாடலை இயற்றியுள்ளதாக ஏ.ஆர்.ரஹ்மான் தரப்பில் நீதிமன்றத்திலேயே விசாரணையின்போது தெரிவிக்கப்பட்டது. அதனை அடிப்படையாக கொண்டு தான் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே காப்புரிமை விவகாரத்தில் ரூ.2 கோடி தொகையை டெல்லி உயர்நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் செலுத்த வேண்டும்’’ என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
The post அனுமதியின்றி பாடலை பயன்படுத்தியதால் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ரூ.2 கோடி செலுத்த வேண்டும்: டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.