நீதிமன்ற உத்தரவுகளை மசாஜ் சென்டர்கள் தவறாக பயன்படுத்துவதாக உயர் நீதிமன்றம் வேதனை

சென்னை : நீதிமன்ற உத்தரவுகளை மசாஜ் சென்டர்கள் தவறாக பயன்படுத்துவதாக உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. அண்ணாநகரில் மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடப்பதாக வந்த தகவலை அடுத்து போலீஸ் சோதனை செய்தது. சோதனையின்போது, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள் மீட்கப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. நீதிமன்ற உத்தரவை மீறி போலீசார் சோதனை நடத்தியதாக உயர் நீதிமன்றத்தில் மசாஜ் சென்டர் வழக்கு தொடர்ந்தது. மசாஜ் சென்டரில் சோதனை நடத்திய வீடியோ, புகைப்பட ஆதாரங்களை அரசு தரப்பு தாக்கல் செய்தது. வீடியோக்களை பார்த்து அதிர்ந்த நீதிபதி, நீதிமன்ற அவமதிப்பு வழக்காக கருத முடியாது என கருத்து தெரிவித்தது. நீதிமன்ற உத்தரவுகளை மசாஜ் சென்டர்கள் தவறாக பயன்படுத்தி வருவதாக நீதிபதி வேதனை தெரிவித்தார்.

The post நீதிமன்ற உத்தரவுகளை மசாஜ் சென்டர்கள் தவறாக பயன்படுத்துவதாக உயர் நீதிமன்றம் வேதனை appeared first on Dinakaran.

Related Stories: