நீதிமன்றத்தில் சீமான் ஆஜர்

செய்யாறு: செய்யாறு அடுத்த பிரம்மதேசம் கிராமத்தில் கடந்த 2022 ஜூலை 21ம் தேதி, நடந்த பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், போலீசார் குறித்தும் அவதூறாக பேசியதோடு, சாதி, மதம் தொடர்பான உணர்வை தூண்டும் வகையிலும் பேசியதாக சீமான் மீது செய்யாறு குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்காக நேற்று காலை 10.40 மணியளவில், சீமான் செய்யாறு கோர்ட்டில் ஆஜரானார். அப்போது நீதிபதி கேட்ட கேள்விக்கு பதில் அளித்துவிட்டு 8 நிமிடத்தில் வெளியேறினார்.

The post நீதிமன்றத்தில் சீமான் ஆஜர் appeared first on Dinakaran.

Related Stories: