செங்கல்பட்டு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் இறந்தோர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் காயார் கிராமத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் இறந்தோர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டம், தையூர் கிராமம், பாலமாநகரைச் சேர்ந்த ஹரிதாஸ் (32) த/பெ.சேகர் என்பவர் கடந்த 1ம் தேதி இரவு தனது மனைவி சுகந்தி (35), மூத்த மகன் லியோ டேனியல் (வயது 11) மற்றும் இளைய மகன் ஜோ.டேனியல் (வயது 5) ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் காயார் கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்குச் சென்று திரும்பினர்.

அப்போது; வழியில் காப்பு காட்டு வளைவின் அருகில் கேளம்பாக்கத்தில் இருந்து காயார் கிராமத்தை நோக்கி எதிர் திசையில் வந்த நான்கு சக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் ஹரிதாஸ் மற்றும் அவரது மூத்த மகன் செல்வன்.லியோ டேனியல் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், திருமதி.சுகந்தி மற்றும் செல்வன்.ஜோ டேனியல் ஆகிய இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சுகந்தி சிகிச்சை பலனின்றி ஏப்.2ம் தேதி அதிகாலை உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாயும், காயமடைந்த சிறுவனுக்கு 1 லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். என்று கூறியுள்ளார்.

The post செங்கல்பட்டு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் இறந்தோர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: