கூடுதலாக, பூந்தமல்லி முதல் பரந்தூர் வரையிலும், கோயம்பேடு முதல் ஆவடி வரையிலும் சென்னைமெட்ரோ ரயில் நிறுவனத்தின் குழுவுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர். இந்நிகழ்வில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன், ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் திட்டக் குழுத் தலைவர் வென்யு-கு, நிதியியல் மேலாண்மை சிறப்புநிபுணர் யி கெங், திட்ட ஆலோசகர் மூஹ்யூன் சோ, சமூக மேம்பாட்டு சிறப்பு நிபுணர் சிவராம கிருஷ்ண சாஸ்திரி ஜோஸ்யுலா, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை பொதுமேலாளர்கள் ரேகா பிரகாஷ் (திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), எஸ்.அசோக் குமார், (வழித்தடம்மற்றும் உயர்மட்ட கட்டுமானம்), மற்றும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர். நிதியுதவி செய்வதில் பிற பன்னாட்டு வங்கிகளும் இதே போன்ற ஆர்வத்தை காட்டி வருகின்றன. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
The post ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி அதிகாரிகள் சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டம் குறித்து காலமுறை ஆய்வு..!! appeared first on Dinakaran.