மேற்படி இவ்வழக்கின் புலன் விசாரணை அதிகாரியான காவல் ஆய்வாளர் திருமதி.சந்திரா அவர்களால் எதிரிகளான தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 1.ஆசை (வயது-28), 2. செல்வராமர்(வயது-40), 3.சசிக்குமார் (வயது-36), சரித்திர பதிவேடு குற்றவாளியான சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த 4.கார்த்தி(எ) லூசுகார்த்தி(வயது-29) மற்றும் 5. பிரபு(வயது-26) ஆகியோரை 04.10.2023-ம் தேதி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு வழக்கின் புலன்விசாரணை முடித்து எதிரிகளின் மீது 19.10.2023-ம் தேதி நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்தார்.
இவ்வழக்கினை விசாரணை செய்த தஞ்சாவூர் மாவட்ட இன்றியமையா பொருட்கள் சட்ட வழக்குகளுக்கான அமர்வு நீதிமன்ற நீதிபதி (EC COURT) திரு.சுந்தர்ராஜன் அவர்கள் இன்று 27.03.2025 வழக்கின் எதிரிகளான தேனீ மாவட்டத்தைச் சேர்ந்த 1.ஆசை(வயது-28). 2.செல்வராமர்(வயது-40), 3.சசிக்குமார்(வயது 36), சரித்திர பதிவேடு குற்றவாளியான சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த 4.கார்த்தி(எ) லூசுகார்த்தி(வயது-29) மற்றும் 5.பிரபு(வயது-26) ஆகியோருக்கு தலா 5 வருட சிறை தண்டனை மற்றும் ரூ.20.000/- அபராதத் தொகையும் விதித்து உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கில் திறம்பட பணிப்புரிந்தமைக்காக காவல் ஆய்வாளர் மற்றும் நீதிமன்ற காவலர் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினர்.
The post 15 கிலோ கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த சரித்திரபதிவேடு குற்றவாளி உட்பட 5 நபர்களுக்கு தலா 5 வருட சிறை தண்டனை! appeared first on Dinakaran.