சென்னை, மார்ச் 25: கும்மிடிப்பூண்டி மார்க்க மின்சார ரயில்கள், வரும் 27, 29ம் தேதிகளில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: சென்னை – கூடூர் வழித்தடத்தில் பொன்னேரி – கவரப்பேட்டை இடையே பராமரிப்பு பணிகள் நடைப்பெற உள்ளதால் வரும் 27, 29 ஆகிய தேதிகளில் மதியம் 1.20 மணி முதல் மாலை 5.20 மணி வரை சென்னை – கும்மிடிப்பூண்டி இடையே மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அதன்படி, மூர்மார்க்கெட் – சூளூர்பேட்டை இடையே காலை 5.40 மணிக்கு இயக்கபடும் மின்சார ரயில் ரத்து செய்யப்படுகிறது. அதே போல் மூர்மார்க்கெட் – சூளூர்பேட்டை இடையே காலை 10.15, 12.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், மூர்மார்க்கெட் – கும்மிடிப்பூண்டி இடையே காலை 10.30, 11.35, 1.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. மேலும், சென்னை கடற்கரை – கும்மிடிப்பூண்டி இடையே மதியம் 12.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
மறுமார்க்கத்தில், கும்மிடிப்பூண்டி – மூர்மார்க்கெட் இடையே மதியம் 1, 3.45 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அதே போல் சூளூர்பேட்டை – மூர்மார்க்கெட் இடையே 12.35, 1.35, 3.10 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. கும்மிடிப்பூண்டி – கடற்கரை இடையே மதியம் 2.30, 3.15, 4.30 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. இந்த மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதால், மூர்மார்க்கெட் – பொன்னேரி இடையே காலை 10.30, 11.35, 1.40, மணிக்கும், கடற்கரை – பொன்னேரி இடையே மதியம் 12.40, 2.40 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். மறுமார்க்கத்தில் பொன்னேரியில் இருந்து மதியம் 1.18, 3, 4, 4.15, 4.45 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
The post வரும் 27 மற்றும் 29ம் தேதிகளில் கும்மிடிப்பூண்டி மார்க்க மின்சார ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.