* நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு: அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பை நீங்கள் (அதிமுக) ஏன் நிறுத்தினீர்கள்? நீங்கள் நிறுத்தியதை நாங்கள் கொண்டு வருவதாக அறிவித்துள்ளோம். அரசு ஊழியர்களின் சலுகையை பறித்துவிட்டு இப்போது நீலி கண்ணீர் வடிக்கிறீர்கள்.
எடப்பாடி பழனிசாமி: திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னதை செய்யாததால் அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அரசின் நிலை என்ன?
* அமைச்சர் தங்கம் தென்னரசு: அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை முதல்வர், நிதித்துறை செயலாளரிடம் விவாதித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
* எடப்பாடி பழனிசாமி: அரசு ஊழியர்களின் சரண்டர் விடுப்பை நாங்கள் நிறுத்தவில்லை.
* தங்கம் தென்னரசு: சரண்டர் விடுப்பை ரத்து செய்தது திமுக ஆட்சியில் இல்லை. அதிமுக ஆட்சியில்தான்.
* அமைச்சர் எ.வ.வேலு: விடுமுறை எடுக்காமல் அரசு ஊழியர்கள் பணியாற்றினால், அதை சரண்டர் செய்யலாம். இந்த ஆண்டு (2025-26) முழுமையாக பணி செய்தால் 15 நாள் பணப்பலனை 2026ம் ஆண்டு ஏப்ரலில் பெறலாம்.
The post அரசு ஊழியர்களின் சரண்டர் விடுப்பை ரத்து செய்தது அதிமுக ஆட்சியில்தான்: அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு appeared first on Dinakaran.