அதன்பிறகு, தங்கத்தின் விலை தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வருகிறது. தங்கம் விலையின் புதிய உச்சமாக கடந்த 19ம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.7,280க்கு விற்பனையானது. ஒரு சவரன் ரூ.58,240 என்ற புதிய உச்சத்தை அடைந்தது. இதையடுத்து நேற்று தங்கம் சவரனுக்கு ரூ.80 உயர்ந்த நிலையில் இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.58,880க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.7,360க்கு விற்பனையாகிறது. தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலையும் புதிய உச்சம் தொட்டது. சென்னையில் வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் கிராம் ரூ.107க்கு விற்பனை செய்யப்படுகிறது.
The post வார இறுதியில் தங்கம் விலை புதிய உச்சம்.. சவரன் ரூ.59 ஆயிரத்தை நெருங்கிய நிலையில் ரூ.60 ஆயிரத்தை தொட வாய்ப்பு..!! appeared first on Dinakaran.