×
Saravana Stores

பகுதிநேர ஆசிரியருக்கு தீபாவளிக்கு முன்னரே ஊதியம் வழங்க ஜி.கே.வாசன் கோரிக்கை

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: பகுதிநேர ஆசிரியர்கள் கடந்த 13 ஆண்டுகளாக தொகுப்பு ஊதியத்தின் அடிப்படையில் குறைந்த சம்பளத்தில் பணியாற்றி வருகின்றனர். பல வருடங்களாக தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என போராட்டம் நடத்தி அரசு கவனத்திற்கு கொண்டு வந்தும் இதுவரை அந்த கோரிக்கை நிறைவேற்றப்படாமல் உள்ளது.

தற்போது பண்டிகை காலம் என்பதால் முன்பணம் வழங்கவும், தீபாவளிக்கு முன்னதாக ஊதிய வழங்க வேண்டும் என பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். எனவே, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பண்டிகைகாலத்தில் கடன் வழங்கி அவற்றை சம்பளத்தில் பிடித்தம் செய்யும் நடைமுறையை போல் பகுதிநேர ஆசிரியர்களுக்கும் அந்த சலுகையை வழங்க வேண்டும். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

The post பகுதிநேர ஆசிரியருக்கு தீபாவளிக்கு முன்னரே ஊதியம் வழங்க ஜி.கே.வாசன் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Diwali ,K. ,Chennai ,Tamil State Congress Party ,G. K. ,Vassen ,Diwali K. ,Dinakaran ,
× RELATED தீபாவளி பண்டிகையை ஒட்டி கூட்ட நெரிசலை...