×
Saravana Stores

வீட்டின் எதிரே நிறுத்தப்பட்டிருந்த பைக் மாயம்

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம், ஏலம்பாக்கம் கிராமம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மகன் லோகேஸ்வரன்(27). இவர் நேற்றுமுன்தினம் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் வெளியே நிறுத்திவிட்டு தூங்கச் சென்றார். இதனை தொடர்ந்து, மறுநாள் காலையில் பார்த்தபோது அவரது மோட்டார் சைக்கிள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து லோகேஸ்வரன் மப்பேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வீட்டின் எதிரே நிறுத்தப்பட்டிருந்த பைக் மாயம் appeared first on Dinakaran.

Tags : THIRUVALLUR ,BAJANAI TEMPLE STREET ,ELAMBAKKAM VILLAGE ,KADAMBATTUR UNION ,Lokeswaran ,Dinakaran ,
× RELATED ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணியை...