×
Saravana Stores

சிவகாசிக்கு பட்டாசு வாங்க சென்ற கம்பெனி மேலாளரை குத்தி ரூ.10 லட்சம் கொள்ளை

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் மொரப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் யுவராஜ் (41). சென்னை பாரிசில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார். இவர், கம்பெனியில் வேலை செய்பவர்களுக்கு தீபாவளி பட்டாசு கொடுப்பதற்காக சிவகாசியில் பட்டாசு கொள்முதல் செய்வதற்காக வேனில் நேற்றுமுன்தினம் இரவு 11 மணி அளவில் புறப்பட்டுள்ளார். நேற்று அதிகாலை 2 மணியளவில் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே உள்ள தண்ணீர்பந்தல் பகுதியில் வேன் சென்று கொண்டிருந்தது.

அப்போது 2 பைக்குகளில் வந்த 6 மர்ம நபர்கள், யுவராஜ் வந்த வேனை வழிமறித்து நிறுத்தி யுவராஜை கத்தியால் குத்தி ரூ.10 லட்சம் ரொக்க பணத்தை பறித்து சென்றனர். இதில் படுகாயம் அடைந்த யுவராஜ், பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

போலீசார், யுவராஜிடம் விசாரணை நடத்தியதில், பைக்குகளில் வந்தவர்கள் வேனை ஓரமாக நிறுத்தும் படி சைகை கூறியதால் வேன் நிறுத்தப்பட்டதும், உதவி கேட்பதுபோல் அருகே வந்தவர்கள் அவரை தாக்கி பணத்தை பறித்து கொண்டு தப்பி ஓடியதும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சிவகாசிக்கு பட்டாசு வாங்க சென்ற கம்பெனி மேலாளரை குத்தி ரூ.10 லட்சம் கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Sivakasi ,Chennai ,Yuvaraj ,Morapakkam ,Chengalpattu district ,Paris ,Diwali ,Dinakaran ,
× RELATED சிவகாசியில் உள்ள லாரி பார்சல் சர்வீஸ்...