×
Saravana Stores

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளும் அக்.27ம் தேதி செயல்படும் என அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளும் அக்.27ம் தேதி செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்; தீபாவளி 31.10.2024 அன்று கொண்டாடப்படுவதாலும், அன்றைய தினம் மாத இறுதி நாளாக இருப்பதாலும் அரிசி மற்றும் இதர அத்தியாவசியப் பொருட்கள் குடும்ப அட்டைதாரர்களுக்குத் தங்கு தடையின்றி கிடைப்பதற்கு ஏதுவாக தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளும் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (27.10.2024) அன்று செயல்படும்.

ஆதலால் குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்குரிய பொது விநியோகத் திட்ட பொருட்களை 27.10.2024 (ஞாயிறு) அன்றும் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. இந்த விடுமுறை நாளில் பணியாற்றுவதற்கு ஈடாக 16.11.2024 சனிக்கிழமை அன்று பொது விநியோகத் திட்ட கடைகளுக்கு விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளும் அக்.27ம் தேதி செயல்படும் என அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Diwali ,Dinakaran ,
× RELATED விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியை...