×
Saravana Stores

கனமழை காரணமாக மதுரையில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த 2 விமானங்கள் பாதுகாப்பாக தரையிறக்கம்

மதுரை: கனமழை காரணமாக மதுரையில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த 2 விமானங்கள் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டன. மதுரை மாவட்டத்தின் சில பகுதிகளில் கடந்த ஒரு மணி நேரமாக பலத்த மழைப் பெய்து வருகிறது. மதுரையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் வானிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கனமழையால் மதுரை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் 2 விமானங்கள் வட்டமடித்து வந்தன. சென்னை மற்றும் பெங்களூருவில் இருந்து மதுரை வந்த 2 இண்டிகோ விமானங்கள் வானில் வட்டமடித்தன.

வானிலை மோசமடைந்து உள்ளதால் விமானம் தரை இறங்குவதில் சிக்கல் எனத் தகவல் வெளியானது. இந்நிலையில் கனமழை காரணமாக மதுரையில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த 2 விமானங்கள் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டன. வானிலை சீரானதை தொடர்ந்து 2 விமானங்களும் மதுரை விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டன. பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதால் பயணிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

 

The post கனமழை காரணமாக மதுரையில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த 2 விமானங்கள் பாதுகாப்பாக தரையிறக்கம் appeared first on Dinakaran.

Tags : Madura ,Madurai ,Madurai district ,Dinakaran ,
× RELATED தொடரும் உயிரிழப்புகள்… மதுரையில்...