×
Saravana Stores

கூடலூர் அருகே சாலை ஓரத்தில் காட்டு யானைகள் முகாம்; வாகன ஓட்டிகள் அச்சம்

கூடலூர்: நீலகிரி மாவட்டம், கூடலூர் இருந்து ஊட்டிச்செல்லும் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி இப்பகுதியில் இந்த யானை கடந்த 2 தினங்களாக முகாமிட்டுள்ளது. கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட கோத்தர் வயல், அக்கார்டு உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் குடியிருப்புகளை ஒட்டி வரும் இந்த காட்டு யானை கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக இப்பகுதிகளில் சுற்றித்திரிகிறது. பகல் நேரத்தில் அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்று விடும் இந்த யானை கடந்த 2 தினங்களாக தலைமை தபால் நிலையத்தை ஒட்டிய தனியார் நிலத்தில் முகாமிட்டு உள்ளது.

பகல் நேரத்தில் யானை சாலை ஓரத்தில் முகாமிட்டு உள்ளதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பள்ளிகளுக்கு நடந்து செல்லும் மாணவ-மாணவிகள் அச்சமடைந்து வருகின்றனர். வனத்துறையினர் யானையை கண்காணித்து அடர் வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கூடலூர் அருகே சாலை ஓரத்தில் காட்டு யானைகள் முகாம்; வாகன ஓட்டிகள் அச்சம் appeared first on Dinakaran.

Tags : Kudalur ,Nilgiri ,Kothar Vyal ,Accord ,Dinakaran ,
× RELATED கூடலூர் அருகே கோயில் அருகே உலா; ‘போ கணேசா’ எனக்கூறி யானையை அனுப்பிய மக்கள்