×
Saravana Stores

சொந்த கட்சி எம்பிக்கள் அதிருப்தி கனடா பிரதமருக்கு அமைச்சர்கள் ஆதரவு: பதவிக்கு ஆபத்தில்லை

டொராண்டோ: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த 9 ஆண்டாக பிரதமராக பதவி வகித்து வருகிறது. அங்கு பொதுத் தேர்தல் அடுத்த ஆண்டு அக்டோபருக்குள் நடக்க உள்ளது. சமீபகாலமாக மக்கள் மத்தியில் ட்ரூடோ மீதான ஆதரவு குறைந்து வருகிறது. இதனால் கடந்த ஜூனில் நடந்த இடைத்தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி வலுவாக உள்ள டொராண்டோவிலேயே ஒரு மாவட்டத்தில் தோல்வியை சந்தித்தது. இதை சரிகட்டத்தான் ட்ரூடோ, காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் கொலை விவகாரத்தில் இந்தியாவுடன் மோதி, இழந்த பெயரை மீட்கப் பார்க்கிறார்.

ஆனாலும், சொந்தக் கட்சியிலேயே ட்ரூடோவுக்கு எதிர்ப்பு வலுத்துள்ளது. அவருக்கு எதிராக 20 எம்பிக்கள் போர்க்கொடி தூக்கி உள்ளதாக கூறப்படுகிறது. லிபரல் கட்சியின் 3 எம்பிக்கள் ட்ரூடோ பதவி விலக வேண்டுமென கையெழுத்திட்டிருப்பதாக வெளிப்படையாக கூறி உள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக முடிவு எடுப்பதற்கான லிபரல் கட்சியின் முக்கிய கூட்டம் புதன் கிழமை (நேற்று) நடப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில் அனைத்து அமைச்சர்களும் ட்ரூடோவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் ட்ரூடோ பதவிக்கு எந்த ஆபத்தும் வராது என துணை பிரதமர் ப்ரீலாண்ட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

The post சொந்த கட்சி எம்பிக்கள் அதிருப்தி கனடா பிரதமருக்கு அமைச்சர்கள் ஆதரவு: பதவிக்கு ஆபத்தில்லை appeared first on Dinakaran.

Tags : Canada ,PM ,Toronto ,Justin Trudeau ,Trudeau ,Dinakaran ,
× RELATED இந்தியாவுக்கு எதிராக ஆதாரமற்ற...