×
Saravana Stores

ரூ.20 தராததால் விவசாயி மண்டை உடைப்பு: வாலிபர் கைது

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் அடுத்த அமிஞ்சிகரை கிராமத்தை சேர்ந்தவர் தனஞ்செழியன் (64). விவசாயியான இவர், நேற்று தனது மாட்டுக்கு தீவனம் வாங்க திருக்கழுக்குன்றம் வந்து தீவனம் வாங்கிக் கொண்டு மீண்டும் வீட்டிற்கு செல்வதற்காக வீராணம் கூட்ரோடு அருகே ஷேர் ஆட்டோவுக்காக காத்திருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த வீராபுரத்தை சேர்ந்த அஜித் (27) என்பவர், விவசாயி தனஞ்செழியனிடம் ரூ.20 கேட்டுள்ளார். அதற்கு, விவசாயி பணம் இல்லை என்று சொன்னதால், ஆத்திரமடைந்த அஜித் விவசாயியை சரமாரியாக தாக்கியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த விவசாயியை, அங்குள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருக்கழுக்குன்றம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின்பேரில் திருக்கழுக்குன்றம் போலீசார், வழக்கு பதிவு செய்து அஜித்தை கைது செய்து செங்கல்பட்டு கிளை சிறையில் அடைத்தனர்.

The post ரூ.20 தராததால் விவசாயி மண்டை உடைப்பு: வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Thirukkalukkunram ,Thananjezhiyan ,Aminchikarai village ,Viranam Kootrodu ,
× RELATED திருக்கழுக்குன்றம் அருகே கட்டி...