உயிர் தியாகம் செய்த காவல் துறையினருக்கு ஆவடி காவல் ஆணையர் வீரவணக்கம்

ஆவடி: ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் ஓராண்டில் உயிர் தியாகம் செய்த காவல்துறை மற்றும் பாதுகாப்புப்படை வீரர்களில் மரணம் அடைந்த 213 வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்வு ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட ஆயுதப்படை 5ம் சிறப்பு காவல் படை மைதானத்தில் நேற்று நடைபெற்றது. காவலர் நினைவு சின்னத்தின் அருகே ஆவடி காவல் ஆணையர் கி.சங்கர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் காவல் கூடுதல் ஆணையாளர் ராஜேந்திரன், மத்திய குற்றப்பிரிவு காவல் துணை ஆணையாளர் பெருமாள், காவல் துணை ஆணையாளர் தலைமையிடம் மகேஷ்வரன், ஆவடி காவல் துணை ஆணையாளர் ஐமன் ஜமால், செங்குன்றம் காவல் துணை ஆணையாளர் பாலகிருஷ்ணன், போக்குவரத்து காவல் துணை ஆணையாளர் அன்பு, ஆயுதப்படை காவல் துணை ஆணையாளர் ராஜ் கண்ணா உள்ளிட்டோர் கலந்துகொண்டு மலர் வலையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

The post உயிர் தியாகம் செய்த காவல் துறையினருக்கு ஆவடி காவல் ஆணையர் வீரவணக்கம் appeared first on Dinakaran.

Related Stories: