×
Saravana Stores

கோத்தகிரி அருகே குடியிருப்பில் புகுந்து வளர்ப்பு நாயை வேட்டையாடிய கருஞ்சிறுத்தை: சிசிடிவி கேமராவில் பதிவு

கோத்தகிரி: கோத்தகிரி அருகே குடியிருப்பில் புகுந்து வளர்ப்பு நாயை கருஞ்சிறுத்தை வேட்டையாடிய காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சிறுத்தை, கரடி நடமாட்டம் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. உணவு, தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் சிறுத்தைகள் வீட்டில் வளர்க்கும் நாய், பூனை, வாத்து உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகளை வேட்டையாடி செல்கிறது. இந்த நிலையில் கோத்தகிரி அருகே உள்ள குமரன் காலனியில் நேற்றிரவு குடியிருப்பு பகுதியில் புகுந்த கருஞ்சிறுத்தை வீட்டில் வளர்க்கப்படும் நாயை வேட்டையாடி சென்றது.

இந்த காட்சி அங்கு பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இதுகுடியிருப்பு வாசிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதே போல் கடந்த வாரம் வீட்டிற்குள் புகுந்த கருஞ்சிறுத்தை சங்கிலியால் கட்டப்பட்டிருந்த நாயை வேட்டையாட முயன்று தப்பிச் சென்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து கோத்தகிரி சுற்றுவட்டார பகுதியில் நடமாடிவரும் சிறுத்தை மற்றும் கருஞ்சிறுத்தை நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கோத்தகிரி அருகே குடியிருப்பில் புகுந்து வளர்ப்பு நாயை வேட்டையாடிய கருஞ்சிறுத்தை: சிசிடிவி கேமராவில் பதிவு appeared first on Dinakaran.

Tags : Kotagiri ,Karankhūt ,NEILAGIRI DISTRICT ,KOTHAGIRI ,Karanchuthu ,
× RELATED கோத்தகிரி அருகே ஒரே நேரத்தில் சிறுத்தை, கருஞ்சிறுத்தை உலா