×
Saravana Stores

வீட்டில் தனியாக இருந்த போது துப்பாக்கி முனையில் தம்பதியிடம் ரூ.2 கோடி நகை கொள்ளை: டெல்லியில் பயங்கரம்

புதுடெல்லி: டெல்லியில் வயதான தம்பதியை துப்பாக்கி முனையில் பிணைக் கைதியாக பிடித்து, வீட்டில் இருந்த ரூ.2 கோடி மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். டெல்லியின் பிரசாந்த் விஹாரில் உள்ள எஃப் பிளாக் கட்டிடத்தில் விஞ்ஞானி ஷிபு சிங் மற்றும் அவரது மனைவி நிர்மலா ஆகியோர் வசித்து வந்தனர். அவர்களது வீட்டிற்கு கூரியர் பார்சல் கொடுப்பதாக கூறி இரண்டு இளைஞர்கள் வந்தனர். திடீரென அவர்கள் வீட்டுக்குள் புகுந்தனர். வீட்டுக்குள் நுழைந்த இளைஞர்கள், தம்பதிகளை துப்பாக்கிகளை காட்டி மிரட்டி பணயக்கைதிகளாக பிடித்து வைத்தனர்.

அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக ஷிபு சிங், கொள்ளையர்களிடம் மல்லுகட்டினார். ஆனால் அவரை கொள்ளையர்கள் இருவரும், சரமாரியாக தாக்கினர். பின்னர் அவர்கள் வீட்டில் இருந்த ரூ.2 கோடி மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். பின்னர் தங்களது மகனுக்கு போனில் தகவல் கொடுத்தனர். அவர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், தம்பதியினரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்பகுதியில் இருக்கும் சிசிடிவி காட்சிகள் சேகரிக்கப்பட்டு, அக்கம் பக்கத்தினர் மற்றும் குடும்பத்தினரின் வாக்குமூலங்களை பெற்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வீட்டில் தனியாக இருந்த போது துப்பாக்கி முனையில் தம்பதியிடம் ரூ.2 கோடி நகை கொள்ளை: டெல்லியில் பயங்கரம் appeared first on Dinakaran.

Tags : Delhi ,New Delhi ,Shibu Singh ,F Block ,Prashant Vihar, Delhi ,Dinakaran ,
× RELATED மாற்றுத்திறனாளிகள் விவகாரம் அனைத்து...