×
Saravana Stores

காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் 2 பேர் பலி

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலியாகினர். ஜம்மு காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டம் குண்ட் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இங்கு தனியார் நிறுவனத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று தனியார் நிறுவன தொழிலாளர்கள் தங்கியிருந்த முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 2 பேர் காயமடைந்தனர். இதையடுத்து அந்த பகுதியில் ராணுவம் மற்றும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு மற்றும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

The post காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் 2 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Kashmir Srinagar ,Jammu and Kashmir ,Kund ,Ganderpal district ,Kashmir ,Dinakaran ,
× RELATED ஜம்மு-காஷ்மீர் மாநிலம்...