ஜெட் வேகத்தில் உயரும் தங்கத்தின் விலை.! சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.57,920க்கு விற்பனை: நகை பிரியர்கள் அதிர்ச்சி

சென்னை: சென்னையில் ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.7,240க்கும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.57,920 க்கும் விற்பனை ஆகிறது. வெள்ளி கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ரூ.105 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் பண்டிகை காலத்தையொட்டி தங்கம் உள்ளிட்ட பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ள நிலையில், தங்கத்தின் விலை உயர்ந்திருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு முறையும் விலை குறையும் என்று எதிர்பார்ப்போருக்கு ஏமாற்றம்தான் பரிசாக கிடைக்கிறது. தங்கம் விலை உயர்வுக்கு பல காரணங்களை பொருளாதார வல்லுனர்கள் அடுக்குகிறார்கள். ஒவ்வொரு முறையும் விலை குறையும் என்று எதிர்பார்ப்போருக்கு ஏமாற்றம்தான் பரிசாக கிடைக்கிறது.

தங்கம் விலை உயர்வுக்கு பல காரணங்களை பொருளாதார வல்லுனர்கள் அடுக்குகிறார்கள். கடந்த 3 ஆண்டுகளாகவே சீனா, ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகளுடைய மத்திய வங்கிகள் தங்கங்களை டன் கணக்கில் வாங்கி குவித்து வருகின்றன. இதனால் சர்வதேச அளவில் தங்கத்தின் மீதான தேவை அதிகரித்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளாகவே சீனா, ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகளுடைய மத்திய வங்கிகள் தங்கங்களை டன் கணக்கில் வாங்கி குவித்து வருகின்றன.

இதனால் சர்வதேச அளவில் தங்கத்தின் மீதான தேவை அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.57,280 க்கு விற்பனையானது. இந்நிலையில் சென்னையில் ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.7,240க்கும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.57,920 க்கும் விற்பனை ஆகிறது. வெள்ளி கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ரூ.105 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை இன்று காலை நிலவரப்படி, கிராமுக்கு 10 காசுகள் குறைந்து ரூ.102.90 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,02,900-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

The post ஜெட் வேகத்தில் உயரும் தங்கத்தின் விலை.! சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.57,920க்கு விற்பனை: நகை பிரியர்கள் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: