ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்மன் கொடுத்தும் ஆஜராகாதவர் விமான நிலையத்தில் சிக்கினார்: தனிப்படை போலீசார் விசாரணை

பெரம்பூர்: பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், இதுவரை 28 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஒருவர் என்கவுன்டர் செய்யப்பட்டார். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக, போலீசார் கடந்த 3ம் தேதி குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கில் 200க்கும் மேற்பட்டோரிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். சிலருக்கு சம்மன் அனுப்பினர். சம்மன் அனுப்பியும் சிலர் ஆஜராகவில்லை.

அவ்வாறு பலமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத நபர்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், சம்மனுக்கு ஆஜராகாத கொட்டிவாக்கத்தை சேர்ந்த சுரேஷ் கிருஷ்ணா என்பவர், நேற்று காலை சென்னை விமான நிலையம் வந்தார். அவரது ஆவணங்களை அதிகாரிகள் சரிபார்த்தபோது, அவர் போலீசாரால் தேடப்படும் நபர் என தெரிந்தது. அவரை பிடித்து வைத்து, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், செம்பியம் தனிப்படை போலீசார் விரைந்து சென்று, அவரை பிடித்து, தனி இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

The post ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்மன் கொடுத்தும் ஆஜராகாதவர் விமான நிலையத்தில் சிக்கினார்: தனிப்படை போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: