×
Saravana Stores

கல்லூரி மாணவி கடத்தல்

ஊத்தங்கரை, அக்.19: ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை நார்சாம்பட்டி பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண், தனியார் கல்லூரியில் பிஎஸ்சி படித்து வருகிறார். கடந்த 16ம் தேதி கல்லூரிக்கு சென்ற இளம்பெண், மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுபற்றி இளம்பெண்ணின் தாய் சிங்காரப்பேட்டை போலீசில் புகாரளித்தார். அதில், ஊத்தங்கரை அடுத்த பொம்மரசம்பட்டியை சேர்ந்த சதீஷ்(25) என்பவர், தனது மகளை கடத்தி சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கல்லூரி மாணவி கடத்தல் appeared first on Dinakaran.

Tags : Uthangarai ,Narsampatti ,Singarapet ,
× RELATED போலீஸ்காரர் மாயம்; காதல் மனைவி புகார்