இதனையடுத்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற திருக்குறளில் முற்றோதல் போட்டியில் வெற்றிபெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவ- மாணவிகளுக்கும், அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் மற்றும் கலைஞர் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற பேச்சு போட்டியில் வெற்றிபெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவ- மாணவிகளுக்கும் காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர் வாரிசுதாரர்களின் 4 பயனாளிகளுக்கு ரூ.6,92,741 மதிப்பிலான மாத ஓய்வூதியம் வழங்கும் ஆணையினையும் வழங்கினார்.
முன்னதாக தேசிய தன்னார்வ ரத்ததான தினத்தை முன்னிட்டு, ரத்ததான விழிப்புணர்வு உறுதிமொழியினை கலெக்டர் தலைமையில் அரசு அலுவலர்கள் எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து, தேசிய தன்னார்வ ரத்ததான தினத்தை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ – மாணவிகள் மற்றும் ரத்ததானம் செய்த தன்னார்வலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் கலைச்செல்வி மோகன் வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) செந்தில், உதவி இயக்குநர் (முன்னாள் படைவீரர் நலன்) சீனிவாசன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
The post முன்னாள் படைவீரர் கொடிநாள் நிதி வசூல் செய்த அலுவலர்களுக்கு ஆளுநரின் பாராட்டு சான்றிதழ்: கலெக்டர் கலைச்செல்வி மோகன் வழங்கினார் appeared first on Dinakaran.