அதேபோல் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம் அருகே கழிவு நீருடன் மழை நீர் கலந்து தேசிய நெடுஞ்சாலையில் தேங்கியுள்ளதால் அருகாமையில் உள்ள குடியிருப்பு வாசிகள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் கும்மிடிப்பூண்டி முழுவதும் வெள்ளக்காடாய் காட்சியளிக்கும் அவல நிலை உருவாக வாய்ப்பு உள்ளது. கும்மிடிப்பூண்டி சிப்காட் சுற்றுலாப் பகுதிகளில் தொழிற்சாலைகள் பல இடங்களில் நீர்நிலையை ஆக்கிரமித்து உள்ளதால் கால்வாய்கள் அடைப்பு ஏற்பட்டு கிராமப்புறத்தில் தண்ணீர் சூழ்ந்து விடும் அபாயம் உள்ளது. இதனால், ஆங்காங்கே மழைநீர் நெடுஞ்சாலைத் துறை சாய்களில் நெடுஞ்சாலைகளில் முறையாக வடிகால் அமையாத காரணத்தினால் மழைநீர் நிற்கிறது என பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
The post சின்ன ஒபுளாபுரம் பகுதியில் மழைநீரில் மூழ்கிய தேசிய நெடுஞ்சாலை: வாகன ஓட்டிகள் கடும் அவதி appeared first on Dinakaran.