மானூர் அருகே தம்பி வீட்டில் 25 பவுன் நகை திருடிய அக்கா கைது

மானூர், அக்.11: மானூர் அருகே சுப்பையாபுரத்தைச் சேர்ந்தவர் பத்மகுமார். இவரது மூத்த சகோதரி அனிதா (40) பனவடலிசத்திரம் அருகே திருமலாபுரத்தில் வருகிறார். இந்நிலையில் தம்பியிடம் சொத்தில் அனிதா பங்கு கேட்டு வந்துள்ளார். கடந்த 6ம் தேதி சுப்பையாபுரத்தில் தம்பி வீட்டுக்கு வந்த அனிதா அங்கு யாருமில்லாத நேரத்தில் பீரோவைத் திறந்து 25 பவுன் நகையை திருடி சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பத்மகுமாரின் மனைவி மனிஷா, பீரோவை திறந்து பார்த்த போது நகை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர் கடந்த 7ம்தேதி மானூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் வழக்குப்பதிவு செய்து நேற்று அனிதாவை கைது செய்தார்.

The post மானூர் அருகே தம்பி வீட்டில் 25 பவுன் நகை திருடிய அக்கா கைது appeared first on Dinakaran.

Related Stories: