இதையடுத்து, வனப்பகுதியில் நிலத்தில் ஏற்பட்ட வெடிப்பு தொடர்பாக ஆனைமலை புலிகள் காப்பக வந்தரேவு வனச்சரகர், புவியியல் தொழில்நுட்ப உதவி இயக்குநர், தீயணைப்புத் துறை, வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர், ஆய்வு செய்தனர். இந்த நிலையில், இந்திய புவியியல் ஆய்வு மையம் சார்பாக கொடைக்கானலில் ஏற்பட்ட நிலப்பிளவுக்கான முதற்கட்ட பிரத்யேக ஆய்வறிக்கை வெளியாகி உள்ளது. அதில்,”கூனிபட்டி அருகே உள்ள நீர்நிலையில் இருந்து தண்ணீர் அதிகளவில் பூமிக்குள் நுழைந்துள்ளதால் பிளவு ஏற்பட்டிருக்கலாம். நிலப்பிளவு குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்காலிக நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
The post கூனிபட்டி அருகே உள்ள நீர்நிலையில் இருந்து தண்ணீர் அதிகளவில் பூமிக்குள் நுழைந்துள்ளதால் பிளவு ஏற்பட்டிருக்கலாம் : அறிக்கையில் தகவல் appeared first on Dinakaran.