சிறுமியிடம் பாலியல் சீண்டல் தொழிலாளி போக்சோவில் கைது குடியாத்தம் அருகே

குடியாத்தம், அக். 10: டியாத்தம் அருகே 17 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தொழிலாளியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த வேப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் குமரேசன்(27), மேளம் அடிக்கும் தொழிலாளி. இந்நிலையில், இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு குடியாத்தம் அருகே ஒரு கிராமத்திற்கு இறுதிச் சடங்கில் மேளம் அடிக்க சென்றுள்ளார். அப்போது குமரேசன் அதே பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டில் இருக்கும் 17 வயது சிறுமியிடம் நட்பாக பேசியுள்ளார். மேலும் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமி அவரது பெற்றோர்களிடம் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த, சிறுமியின் பெற்றோர் குடியாத்தம் தாலுகா போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் தாலுகா போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து குமரேசனை நேற்று கைது செய்தனர்.

The post சிறுமியிடம் பாலியல் சீண்டல் தொழிலாளி போக்சோவில் கைது குடியாத்தம் அருகே appeared first on Dinakaran.

Related Stories: