×

குலதெய்வ கோயிலுக்கு வந்தபோது குட்டையில் தேங்கிய மழைநீரில் மூழ்கி சிறுவன், சிறுமி பலி

*பண்ருட்டி அருகே சோகம்

பண்ருட்டி : குலதெய்வ கோயிலுக்கு வந்தபோது குட்டையில் தேங்கிய மழைநீரில் மூழ்கி சிறுவன், சிறுமி பலியானார். கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த கணிசப்பாக்கம் கிராமத்தில் ஆ.நத்தம் கிராமத்தை சேர்ந்த கணபதி என்பவர் செங்கல் சூளை நடத்தி வருகிறார். இவரது உறவினரான கிருஷ்ணகிரி மாவட்டம் மகனூர்பட்டி முசிலி கொட்டாய் பகுதியை சேர்ந்த மஞ்சுநாதன்(32), கார் டிரைவர்.

இவர் தனது மனைவி ஜானகி, மகன் தஷ்வந்த்(12), மகள் பிரதிக்ஷாஸ்ரீ(7) ஆகியோருடன் காரில் நேற்று காலை பண்ருட்டியில் உள்ள குலதெய்வ அய்யனார் கோயிலுக்கு வேண்டுதலை நிறைவேற்ற கணபதி வீட்டிற்கு வந்துள்ளார்.இந்நிலையில் மஞ்சுநாதனின் மகன், மகள் இருவரும் சூளையில் விளையாடி கொண்டிருந்தனர்.

அப்போது அருகே மழைநீர் தேங்கியிருந்த 4 அடி பள்ளத்தில் எதிர்பாராத விதமாக தஷ்வந்த், பிரதிக்ஷாஸ்ரீ தவறி விழுந்து நீரில் மூழ்கினர். இதைபார்த்த அருகில் இருந்தவர்கள் சிறுவன், சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்த புகாரின் பேரில், பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post குலதெய்வ கோயிலுக்கு வந்தபோது குட்டையில் தேங்கிய மழைநீரில் மூழ்கி சிறுவன், சிறுமி பலி appeared first on Dinakaran.

Tags : Kulatheiva temple ,Panrutti ,Ganapathi ,A.Nattam ,Ganisappakkam ,Banruti ,Cuddalore ,Dinakaran ,
× RELATED மொபட்டில் மதுபாட்டில் விற்றவர் கைது