ஆபாசமாக திட்டியதால் காதலி தற்கொலை காதலனுக்கு 5 ஆண்டு சிறை: மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: காதலன் திட்டியதால் மனமுடைந்து காதலி தற்கொலை செய்த விவகாரத்தில் காதலன் உள்ளிட்ட இருவருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தண்டையார்பேட்டையை சேர்ந்த மரகதம் என்பவரின் மகள் ஷாலினி, அதே பகுதியை சேர்ந்த அருண் என்பவரை காதலித்து வந்தார். இந்நிலையில் அருணை பிடிக்காத பெற்றோர், ஷாலினியின் காதலை ஏற்க மறுத்தனர். இதன்பின் பெற்றோரின் அறிவுறுத்தல்படி ஷாலினி அருணுடன் பேசுவதையும், பார்ப்பதையும் தவிர்த்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அருண், கடந்த 2022ம் ஆண்டு மார்ச் 24ம் தேதி, தன் நண்பர் ஈஸ்வரனை அழைத்து சென்று ஷாலினியை ஆபாச வார்த்தைகளால் திட்டி சண்டையிட்டுள்ளார். இதனால் மனமுடைந்த ஷாலினி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது தொடர்பாக ஷாலினியின் தாய் மரகதம் அளித்த புகாரின் அடிப்படையில் ஆர்.கே.நகர் போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், அருண் மற்றும் அவரின் நண்பர் ஈஸ்வரனை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெ.தேவி முன்பு விசாரணஐக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் அருண் மற்றும் அவருடைய நண்பர் ஈஸ்வரன் ஆகியோருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 12 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராத தொகையில் 20 ஆயிரம் ரூபாயை ஷாலினியின் தாயாருக்கு வழங்க வேண்டும். கூடுதல் இழப்பீடு வழங்குவது தொடர்பாக மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி பரிந்துரைந்தார்.

 

The post ஆபாசமாக திட்டியதால் காதலி தற்கொலை காதலனுக்கு 5 ஆண்டு சிறை: மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: