×

கோடநாடு வழக்கில் கோயில் பூசாரியிடம் விசாரணை

நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சிபிசிஐடி முன்பு கோயில் பூசாரி விக்னேஷ், தனியார் வங்கி ஊழியர்கள் 2 பேர் ஆஜராகியுள்ளனர். கோவையில் உள்ள அலுவலகத்தில் சிபிசிஐடி அலுவலகத்தில் 3 பேரும் ஆஜராகியுள்ளனர். கோடநாடு தேயிலை தோட்டத்தின் கோயில் பூசாரி விக்னேஷ், விசாரணைக்காக ஆஜராகியுள்ளார். புதுச்சேரியைச் சேர்ந்த தனியார் வங்கி தரப்பில் 2 ஊழியர்களிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

The post கோடநாடு வழக்கில் கோயில் பூசாரியிடம் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Kodanadu ,Nilgiri ,CBCID ,Temple Priest ,Vignesh ,Goa ,Temple Priest Vignesh ,Godanadu Tea Garden ,priest ,Godanadu ,
× RELATED கோடநாடு கணினி ஆபரேட்டரின் தந்தையிடம் விசாரணை..!!