கிரிக்கெட் போட்டியில் ராமேஸ்வரம் அணி முதலிடம்

மண்டபம், அக்.2:வேதாளை அருகே மரைக்காயர் பட்டிணம் விளையாட்டு மையதானத்தில் கடந்த 15ம் தேதி தொடங்கி 15 நாட்கள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் 20க்கும் மேற்பட்ட அணியினர் கலந்துகொண்டு, சுழற்சி முறையில் விளையாடி வந்தனர். இந்நிலையில் இறுதி சுற்றில் ராமேஸ்வரம் நேதாஜி கிரிக்கெட் குழு முதல் பரிசையும், மரைக்காயர் பட்டினம் எம்.பி கிரிக்கெட் குழு இரண்டாவது பரிசையும், பாம்பன் பகுதியை சேர்ந்த ரிவான்சஸ் கிரிக்கெட் குழு 3வது பரிசையும், வேதாளை ஜெ.டி கிரிக்கெட் குழு 4வது பரிசையும் பெற்றன.

இந்த கிரிக்கெட் விளையாட்டில் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான ரூ.50 ஆயிரம் ஊக்கத்தொகையை ராமேஸ்வரம் நேதாஜி கிரிக்கெட் குழுவினர் பெற்றுக்கொண்டனர். இதில் மண்டபம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் தெளபீக் அலி தலைமை வகித்து வீரர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post கிரிக்கெட் போட்டியில் ராமேஸ்வரம் அணி முதலிடம் appeared first on Dinakaran.

Related Stories: