அக்டோபர் 3-வது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும்: பாலச்சந்திரன் பேட்டி

சென்னை: வட தமிழக பகுதிகளில் இயல்பை விட வடகிழக்குப் பருவமழை அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்  தெரிவித்துள்ளார். வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் அளித்த பேட்டியில்; தென் தமிழக பகுதிகளில் இயல்பை விட மழை சற்று குறைவாகவே இருக்க வாய்ப்பு. அக்டோபர் 3-வது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும். குறுகிய காலத்தில் அதிக மழை பெய்யும் நிகழ்வு தற்போது அதிகமாக நடக்கிறது. லா-நினா உருவான கடந்த 42 ஆண்டுகளில் 29 ஆண்டுகளில் இயல்பைவிட அதிக மழை பெய்துள்ளது என அவர் கூறினார்.

The post அக்டோபர் 3-வது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும்: பாலச்சந்திரன் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: