மின்சார கார்களை தயாரிப்பது குறித்து ஃபோர்டு நிறுவனம் ஆலோசனை

சென்னை: சென்னையை அடுத்த மறைமலை நகரில் உள்ள தொழிற்சாலையில் மின்சார கார்களை தயாரிப்பது குறித்து ஃபோர்டு நிறுவனம் ஆலோசனை மேற்கொண்டுள்ளது. மீண்டும் தமிழ்நாட்டில் கார் உற்பத்தியில் ஈடுபடப் போவதாக அண்மையில் ஃபோர்டு மோட்டார் நிறுவனம் அறிவித்தது. அமெரிக்கா சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஃபோர்டு நிறுவன அதிகாரிகளை சந்தித்து அழைப்பு விடுத்திருந்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அழைப்பை ஏற்று தமிழ்நாட்டில் மீண்டும் கார் உற்பத்தியில் ஈடுபட உள்ளதாக ஃபோர்டு அறிவித்திருந்தது.

The post மின்சார கார்களை தயாரிப்பது குறித்து ஃபோர்டு நிறுவனம் ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: